Monday, December 29, 2014

இயற்கையின் காதலன்...
அன்பே அந்த மர சாலையில் செல்லாதே
காற்று பலமாய் வீசுகிறது
பூக்கள் உதிர்ந்து உனக்கு காயம் பட்டு விடபோகிறது 
பூக்களை காலால் கூட மிதிக்காதே
பாதம் புண்ணாகி விடபோகிறது
நீ தொட்டு உடுத்திய பட்டு பரவசபடுகிறது
இட்டுக்கொண்ட பொட்டு இன்பத்தில் மிதக்கிறது
சூடிக்கொண்ட பூவோ சூழ்நிலை மறுக்கிறது.
இது தற்செயலா இல்லை உன்செயலா என்று புரியவில்லை எனக்கு...
நீ கோபம் கொண்ட போதெல்லாம்
நானிருக்கும் பகுதியில் இயற்க்கை சீற்றம்.
என் இயற்கையாய் ஆனவளே
நான் விரும்பும் இயற்கையை போல
உன்னையும் காதலிக்கிறேன்

0 comments :

Post a Comment

Tricks and Tips