Monday, January 26, 2015



















அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள்

நம்மை மன்னன் ஆண்டான்
மாற்று தேசத்தான் ஆண்டான்
இது நாம் ஆண்டுகொண்டிருக்க
வேண்டிய தருணமிது.

ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு
ஆனாலும் இன்றளவும்
நமை ஆள்வது நாம் தானா.

Sunday, January 25, 2015


என் காது மடல் வருடி
நீ இட்ட முத்தத்திலே
புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை
துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை.

காதினில் தொடங்கி
கழுத்தேறி வளைந்து
பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து
மணிக் கழுத்தினில் ஒன்று
கீழ் இறங்கி மார்பினில் ஒன்று
என நீ கொடுத்த முத்தத்தில்
கிறங்கிப்போனேன்.

என் உடல் மணக்கிறது
உன் எச்சிலின் ஏகாந்த வாசம்.

என்ன வரைகிறாய் என் முதுகினில்.

Saturday, January 24, 2015


என் காதல் கணவா
ஏன் இப்படி?

காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.

என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்.

Monday, January 19, 2015














விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.

தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா

நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி

பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன.

Wednesday, January 14, 2015

எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு

கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?

அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்

Sunday, January 11, 2015














என்ன செய்வது
மீசை முளைக்கும் முன்னமே
ஆசை முளைத்து விடுகின்றது.

பாடங்கள் பதியாத என் மனதினில்
பாவை உந்தன் முகம் மட்டும்
பார்த்த கனமே ஒட்டிகொண்டது.

உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே
பாடங்களின் தலைப்பை மட்டும் 
பதிந்து கொண்டேன்.

கரும்பலகையினில் எழுதி ரசித்தேன்
உன் பெயரினை, கார் வானில் 
கண்ட முழுநிலவென.

Saturday, January 10, 2015


























உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.

அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.

ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.

காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம்












தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே

அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.

மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே

தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.

உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.

பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூட


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.

தேகமெங்கும் பனி உறையுது
நீ தொட்ட மாத்திரத்தில்,

ஆடை போல அம்புட்டும் உருகுது.
அங்கமெல்லாம் அனல் பரவுது.

பனிமலரா நானிருக்க
பகலவனா என நீயுருக்க


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.




எங்கோ சிதறிக்கிடந்த
உள் அணிபவைகளையும்
கணவன் போர்த்திப் படுத்திருக்கும்
தன் சேலையையும்
தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

கலைந்த கார் கூந்தலையும்
அள்ளி முடிந்து கொண்டாள்.

அழகாய் சிரிக்கிறாள்
அம்மணக் குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனைப் பார்த்து.

அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள்
அவனைப் பார்த்து ரசித்தபடியே.

"கடை கடையாய் ஏறி இறங்கி
ரசனையாய் வாங்கி வந்து
அணியச்சொல்லி அழகு பார்க்கிறான்
பகலிலே.
ஆனால் அழுக்குப் பையன் இவன்
இரவு வந்தால் களைந்து விடுகிறான்
பகலணிவித்தவைகளை.
கேட்டால் என்னை அணிந்து கொள்ளேன்
என்பான் என் கலையழகு புருசன்.

இவனை கடிந்து கொள்வதா
இல்லை கட்டிக்கொள்வதா"

நீங்களே சொல்லுங்களேன்...!



Friday, January 9, 2015



கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு
கண்காணாம போன புள்ள.

கண்ணு ரெண்டும் தூங்கவில்ல 
கட்டியணைக்க வாடி புள்ள.

உனயென்னி நெதந்துடிக்கிறேன் 
கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன்.

சோறு தண்ணி எறங்கவில்ல
ஏஞ்சோகமின்னும் தீரவில்ல.

வட்டிசெம்பு வெளக்கவில்ல
வாசப் பெருக்கி கூட்டவில்ல.
எந்தாயி நீயில்லாம 
கொழம்பிப் போய் கெடக்குறேனே 
தெளிய வைக்க வாடி புள்ள.

நீ குடுத்த பால் சொம்பு 
மூலையில உருளுது.

ஓன் நெனப்பு மட்டுமே 
என் மூளையில பொரலுது.

கயித்துக்கட்டில் உன்ன 
கண் தேடுதடி 
ரவைக்குள்ள வந்துருடி...

Friday, January 2, 2015


பெருவெளிச்சமில்லை
ஆனால் அருகில் வருபவர்களை காணலாம்.

பிம்பங்களாய் தெரிகின்றன
மரங்களும் தூரத்து மலைகளும்.

கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள்
ஊரின் முதல் உழைப்பாளிகள்,
தொடங்கிவிட்டனர் வேலையை
காவென கரைந்துகொண்டே.

ஆள் அரவமற்ற அழகிய சாலையில்
தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது
அழகு மைனாக்கள்.

கருப்பு வெள்ளையாய் தெரிகிறது
ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன்
உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும்.

மின்சாரக்கம்பிகளும் ரசிக்கப்படுகிறது
சிட்டுக்கள் அமர்ந்து சிலிர்ப்பூட்டும்
குளிர் பொழுதுதனில்.

இயல்பாய் ரசிக்கவைக்கிறது
மீன்வால் குருவிகளும்
ஏகபாதமாய் நின்று இரைதேடும் வெண்நாரைகளும்.

பச்சைமேணி வயல்வெளிகள் எங்கும்
வெண்திட்டுகளாய் பனித்துளிகள். இவை
வானும் மண்ணும் சங்கமித்ததின்
பொருளுணர்த்தும் காதல் மொழிகள்.

சுவாசம் நிறைக்கின்றது
மாசில்லா பிராணவாயு.

நிசப்தம் கலைக்கின்றது பறவைகளின் சப்தம்
அது பகல்பொழுதின் பேரிரைச்சலுக்கெதிரான
மௌன யுத்தம்.

இந்த நாளுக்கான முதல் குளியலை ஏற்றுக்கொள்கிறது
தெளிந்த நீரோடையொன்று.

தண்ணீர் தெளிக்கும் தாவணிப்பெண்கள் தனியழகு.
புள்ளிமான்கள் இட்ட புள்ளிக்கோலம் பேரழகு.

மிதிவண்டி மிதித்துவருகிறார் பால்காரர்
தூக்கம் மிதக்கும் கண்களோடு,
பலரும் படுக்கையிலிருந்து துயில்கலைக்க.

அனைத்திற்கும் உச்சமென காணக்கிடைக்கின்றது
கதிரவனின் கீட்ரொளி அழகு
தாமரை இலையினில் பட்டுத்தெறித்து.

எப்படி உறங்கிகிடந்தேன் இத்தனை நாளாய்
இப்படியொரு அதிகாலையின் பேரழகை காணாமல்.
Tricks and Tips