Monday, December 29, 2014

நேற்றிரவு ஒரு பயங்கரமான கவு ...
யாரென்றே தெரியாத,
கோட் சூட் அணிந்த சில வெளிநாட்டவர்களும்,
சில உள்ளூர் காக்கி சட்டைகளும் நம் வீட்டின் முன்பே கும்பலாய்.
என்னை அழைத்து உன்னை கேட்கிறார்கள், நீ திருடீ என்று...
நான் ஆவேசபட்டவனாய் ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்று கேட்டால் அவர்கள் கூறியது...
வர வர நிலவின் ஒளி குறைந்து கொண்டே செல்கிறதாம்...
தமிழகத்தின் ஒரு பகுதியில் மட்டும் அளவுக்கு அதிகமாய் பிரகாசிக்கின்றதாம்...
அலசி ஆராய்ந்ததில் அது நம் வீடு என்றறிந்து இங்கு வந்துள்ளனர்...
ஆதாவது நிலவொளியை நீ திருடிகொண்டாயாம்...
அவர்கள் உன்னை நோக்கி எத்தனிக்கையில்
பதறிபோய் விழித்து கொண்டேன்...
அருகில் உறங்கிகொண்டிருந்த உன்னை பார்க்கிறேன்
முகம் மறைத்து நீ அழகாய் உறங்கிகொண்டிருந்ததை பார்க்கையில் அவர்கள் கூறியது உண்மை தானோ என்று நினைக்க தோன்றுகிறது...
சிரித்துக்கொண்டே உறக்கத்தை தொடர நினைக்கையில்
புதிதாய் ஒரு பயம்,
நிலவின் ஒளியை திருடினாய் என்று உன்னை தேடி வந்தவர்கள்
நிலாவையே என் உடமை ஆக்கிக்கொண்டேன் என்று (உன் கணவனாகையால்) என் கனவிலும் வருவார்களோ என்று...

0 comments :

Post a Comment

Tricks and Tips