Monday, December 29, 2014

மழையில் நீ விளையாடுவதை பார்க்கும் பொழுது...

மழை என்பதே 
உன்னை தொட்டு விளையாட 
வருணன் ஏற்படுத்திக் கொண்ட 
ஓர் வழிவகை தானோ!...

என்று என்னதோனுகின்றது...



மழைபெய்யும் பொழுது நனைவது
மரங்களும், மனிதர்களும்
இப்புவியில் உள்ள
இன்னபிற பொருட்களும் மட்டுமல்லாது

நேசம் கொண்ட இரு உள்ளங்களும் தானே!



நம்மைத்தவிர வேறு எவரோருவரால்
இந்த மழையின் ஒவ்வொரு துளிகளையும்
ருசித்திருக்க முடியும்...


நனைவது அழகா
இல்லை நனைவதை ரசிப்பது அழகா
என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்

உன்னை நனைவிப்பது தான் அழகு என்று
ஜோராய் பொழிந்து கொண்டிருக்கிறது இந்த வானம்.

0 comments :

Post a Comment

Tricks and Tips