Tuesday, December 30, 2014


ஆங்கிலம்...
அதன் பாஷையிலே சொல்வதென்றால்
தந்தையை டாடியாக்கும்
தாயை மம்மியாக்கும்
தாய் தமிழ் மரபினை டம்மியாக்கும்.
கூழ் குடித்து வாழ்ந்த நாட்களில்
கூடியிருந்தவரெல்லாம் பிரிவினை கண்டனர்
பிட்சா பர்கர் கலாச்சாரத்தில்.
வேண்டும் ஆங்கிலமும்
ஆனால் அளவோடு.
இடைவந்த ஒன்றினுக்காய்
தலைமுறை தாங்கிநின்ற
தனித்தமிழை மறக்கலாமா?
சேலையாய் வேட்டியாய் தமிழுடுத்து
ஆங்கிலமிருக்கட்டும் கைக்குட்டையாய்.
தமிழினமே...
கைக்குட்டை ஒருபோதும்
உன் மானம் காக்காது.
தமிழ்ப்பெண்ணே தமிழுடுத்தி நட
மண்பார்த்து தழைய! தழைய!
உனை பார்த்து
உன் குலம் தழைய.


0 comments :

Post a Comment

Tricks and Tips