Tuesday, December 30, 2014

வேண்டாம்! வேண்டாம்!!!
இனியொரு பிறவி மானிடனாய்.
அதுவும் ஆண்மகனாய்,
அதிலும் தலைமகனாய்.

நினைத்த மாத்திரத்தில் 
கிடைத்தவை எல்லாம்
நினைத்த மாதிரி நிலைப்பதில்லை.
வாழ்க்கை அதன் அத்துணை முகங்களையும்
காட்டிவிட்டது பல பரிமாணங்களில்.

நான்...
தோற்றப்பிழையா?, 
இல்லை காட்சிப்பிழையா...?

வாழ்கையெனும் நாடகமேடையில்
நடிக்கத் தெரிந்தவன் வாழ்கிறான்.
ஒத்திகை இல்லாமல்
நடக்கிறது அரங்கேட்ரமொன்று.
மேடையேற வழிகொடுத்த நீ ஏன்
இறங்க நினைக்கையில் வழியடைக்கிறாய்!

பீஷ்மரைப்போல் எனக்கும் வரமளி
நினைத்தவுடன் மரித்துவிட.

பணம் சம்பாதிக்காத எந்த திறமையும்
மதிக்கபடுவதில்லை இங்கே!

நீ மட்டும் அமைதி காப்பதேன் அங்கே!
மனிதனாய் நீ அவதரித்த போதிலும்
உன்னையும் அவமதித்து
அழித்தது தானே நீ படைத்த
இந்த நல்லுலகம்.

ஓ!!! இறைவனே 
இந்த மானுடப்பிறவி, நீ
எனக்களித்த வரமா? இல்லை, சாபமா?


0 comments :

Post a Comment

Tricks and Tips