
காற்றில் பறக்கிறது
யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.
அது,
பள்ளிப்பாடம் எழுதிய பாலகனுடயதோ
பருவப்பெண் பழகிய கோலக்கிறுக்கல்களோ
வட்டிக்கணக்கெழுதிய கணவனின் காகிதமோ
வரவு செலவுக்கணக்கெழுதிய மனைவியின் காகிதமோ
விடலை ஒருவனின் முதல் காதல் கடிதமோ
விரக்தியில் எழுதிய மரண சாசனமோ
ஞான கிறுக்கனின் புலம்பல் தத்துவமோ
காதல் கசியும் கவிதைத் தொகுப்போ
காதலின் சாட்சியோ, இல்லை
கண்ணீரின் பாக்கியோ
ஒருவேளை அன்றொரு நாள்
நானிதுபோல் கிருக்கியதோ
யார் அறிவார்!
என் கண்ணெதிரே காற்றில் பறக்கிறது
யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.

5:08 PM
Unknown
Posted in
0 comments :
Post a Comment