அந்தி சாயும் அழகிய பொழுதினிலே
வீடு திரும்புகிறான்,
ஒயிலான மனைவியுடன்
வெயிலாக கோபித்துச் சென்ற வானவன்.
வீடு திரும்புகிறான்,
ஒயிலான மனைவியுடன்
வெயிலாக கோபித்துச் சென்ற வானவன்.
பொய்க்கோபத்துடன் காத்திருக்கிறாள்
புவிமகளும்.
அடித்த கை அணைக்கவும் வரும் என்று.
புவிமகளும்.
அடித்த கை அணைக்கவும் வரும் என்று.
மெதுவாக நெருங்குகிறான் வானவன்
நிலமகளை நோக்கி, ஆயினும்
பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல்
இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே.
நிலமகளை நோக்கி, ஆயினும்
பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல்
இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே.
எப்படி தொடங்குவது என்றென்னியவன்
வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை.
வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை.
காத்திருந்தவள் தானே அவளும்,
உடனே செவிமடுக்கிறாள்.
இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள்
வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க.
உடனே செவிமடுக்கிறாள்.
இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள்
வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க.
அமைதியாக பொழிய ஆரம்பிக்கின்றான்
அந்திச் சாரலாய்.
அந்திச் சாரலாய்.
தொடக்கத்தில் சூடு காட்டியவள் இப்போது
நிலம் (உளம்) குளிர்கின்றாள்.
நிலம் (உளம்) குளிர்கின்றாள்.
எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் பொழிவான்.
சூடுபிடிக்க தொடங்கியது சாரல்
அடைமழையானது அந்திமழை.
சூடுபிடிக்க தொடங்கியது சாரல்
அடைமழையானது அந்திமழை.
தன் குளிர்க் கரத்தால் தழுவி நிலமகளின்
மண்வாசனை(பெண்வாசனை) நுகர்கிறான்.
மண்வாசனை(பெண்வாசனை) நுகர்கிறான்.
வெகுநேரமாய் தொடர்கிறது இதே நிலை.
அந்திமழை அடைமழையானது,
அவளுடல் ஆறுகாவிரியானது,
இருவரும் மூழ்கியே போய்விட்டனர் இன்பக்கடலிலே.
அந்திமழை அடைமழையானது,
அவளுடல் ஆறுகாவிரியானது,
இருவரும் மூழ்கியே போய்விட்டனர் இன்பக்கடலிலே.
இருந்தபோதிலும்,
பொழிவதை நிறுத்திக்கொள்ள இவனுக்கும் மனமில்லை
இன்னமும் நீர்கொள்ள இவளுக்கும் தயக்கமில்லை.
இயற்கைகென்று ஒரு நியதி உண்டு தானே!
அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை.
பொழிவதை நிறுத்திக்கொள்ள இவனுக்கும் மனமில்லை
இன்னமும் நீர்கொள்ள இவளுக்கும் தயக்கமில்லை.
இயற்கைகென்று ஒரு நியதி உண்டு தானே!
அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை.
அப்பாடா!
ஒருவழியாக நீர்தீர்ந்து போக
மேகம்(மோகம்) களைந்தான் வானவன்.
மழை ஏந்திய களைப்பில் மயங்கி கிடக்கிறாள் புவிமகள்.
மேகம்(மோகம்) களைந்தான் வானவன்.
மழை ஏந்திய களைப்பில் மயங்கி கிடக்கிறாள் புவிமகள்.
மழைவிட்ட போதினிலும்
ஆசைத்திவலைகள் தெரிதுக்கிடகின்றன,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் புவிமகள் மீதினிலே.
.
.
.
இப்போது இருவர் மனதும் ஏங்குகிறது
ஆசைத்திவலைகள் தெரிதுக்கிடகின்றன,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் புவிமகள் மீதினிலே.
.
.
.
இப்போது இருவர் மனதும் ஏங்குகிறது
அடுத்ததோர் அடைமழைக்கு.

4:40 PM
Unknown
Posted in
0 comments :
Post a Comment