Friday, January 9, 2015



கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு
கண்காணாம போன புள்ள.

கண்ணு ரெண்டும் தூங்கவில்ல 
கட்டியணைக்க வாடி புள்ள.

உனயென்னி நெதந்துடிக்கிறேன் 
கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன்.

சோறு தண்ணி எறங்கவில்ல
ஏஞ்சோகமின்னும் தீரவில்ல.

வட்டிசெம்பு வெளக்கவில்ல
வாசப் பெருக்கி கூட்டவில்ல.
எந்தாயி நீயில்லாம 
கொழம்பிப் போய் கெடக்குறேனே 
தெளிய வைக்க வாடி புள்ள.

நீ குடுத்த பால் சொம்பு 
மூலையில உருளுது.

ஓன் நெனப்பு மட்டுமே 
என் மூளையில பொரலுது.

கயித்துக்கட்டில் உன்ன 
கண் தேடுதடி 
ரவைக்குள்ள வந்துருடி...

0 comments :

Post a Comment

Tricks and Tips