Monday, December 29, 2014
























இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.
ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!
அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.
ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!
நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.
ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?
இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.
எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!
எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.
எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?
மரத்தவச்சவன் தண்ணீயுத்துவான்..
என்றெழுதினாய்.
எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!
இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.
இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.
இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.
- ஃபீனிக்ஸ் பாலா

0 comments :

Post a Comment

Tricks and Tips