Monday, December 29, 2014

மண்ணில் வந்தாள் மணித்தாரகை
இவள் இறகு இல்லாத என் தேவதை.
இன்று கண்டாள் உதயவிழா
என் கைகளில் மிதக்கின்றாள் இந்த வெள்ளிநிலா.
நகர்ந்தாடும் நந்தவனம்
இனியிவளே என் வீட்டின் பூந்தோரணம்.
நிலவொளியாய் இவள் வதணம்
இவளே நான் இசைத்த முதல் சரணம்.
உனை கையேந்திய நேரம், அது
ஒரு துளி கண்ணீர்
ஓராழி சந்தோசம்
இப்படிக் கலவையான ஓர் கனம்.
எனை அப்பனாக்கி பிறந்த ஏந்திழை, இவள் என் மகள்!

0 comments :

Post a Comment

Tricks and Tips