Monday, December 29, 2014

சொர்கத்தின் மினியெட்சர் நீயாக...
அந்தக் கண்ணன் வாய் திறந்து
அகிலத்தை காட்டியதை நானிருந்து பார்த்திலேன்.
ஆனால் பால் மனம் வீசும் உன் 
குமுதவாய் இதழ் விரித்த பொழுதினில் அதில்
எனக்கான உலகத்தை பார்க்கிறேன்.
உன் பிஞ்சு விரலால் எனைப் பற்றுகையில்
என் இறைவனே எனைத் தீண்டும் இறைமையை உணர்கிறேன்.
என்னிரு விரலில் உன் ஒரு பாதம் நிறைந்து விடுகிறது
இந்த பூம்பாதத்தில் என் உலகமே அடங்கிவிடுகிறது.
பிறந்து மூன்று நாட்களே ஆன உனக்கின்னும்
கழுத்து நிற்கவில்லை - இது இயல்பு
ஆனால் உனைக்கண்ட நாளிலிருந்தே நான்
இப்புவியிலே நிலைகொண்டு நில்லாதது போன்றொரு மிதப்பெனக்கு.
பூவுலகில் ஒழுங்காக வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கத்தில் இடமாம்,
நான் ஒழுங்காக வாழ்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்த சொர்கதையே இறைவன் எனக்கென பரிசளிதிருக்கிறான் - நீயாக

0 comments :

Post a Comment

Tricks and Tips