Wednesday, December 31, 2014




மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம்
மறவா நோய் வருவதும் தான் வயோதிகம்.

தான் பெற்ற பிள்ளை தன்னை
அநாதை இல்லத்தில் விட்டதையும்
தன் மகளுக்கு தான் எப்படி
பாரமாணோம் என்பதையும்
வயதான காலத்திலும் தன்னைக்
காக்கும் பிள்ளைகளையும்
மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது.

ஓடியாட முடியாத அவர்களின் மனதில்
நினைவோட்டம் ஆயிரங்கள்
வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால்
அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள்.

1 comment :

Tricks and Tips