Tuesday, December 30, 2014



பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்
தனிமை சுடும் என,
ஆனால் அந்த அனல்
என்னையும் வந்து
வாட்டுமென எண்ணவில்லை.

நாம் சேர்ந்திருந்த
உறைபனிப் பொழுதுகளிலெல்லாம்,
தனிமையில் குளிர்காயவே
மனம் நினைத்தது.

ஆனால் மணம் நினைப்பதெல்லாம்
மெய்ப்படுவதில்லையே!

தனிமை இதமாகதானே இருக்கும்
என்றெண்ணிய என்
எண்ணமெல்லாம் (எண்ணம் எல்லாம்)
சாம்பலானது தனிமைத்தீயினில்.

மீண்டும்

உறைய வேண்டும்
உன் பனிப் பார்வையில்,

உடனுறைய வேண்டும் உன்னுடன்
அன்பெனும் ஒரே போர்வையில்.

உடனடித்தேவை என் பாவை.

வந்தனைப்பாயா (வந்து அணைப்பாயா)
தனிமைத் தீயை!!!

0 comments :

Post a Comment

Tricks and Tips