Saturday, January 10, 2015


























உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.

அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.

ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.

காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம்
இசைந்து அசைந்து கொண்டிருக்கிறது
களமேற காத்திருக்கும்நெற்க்கதிரொன்று

நேரம் போய்க் கொண்டிருக்கிறது.

சூரியன் வந்திறங்கி அஸ்தமிக்க
செந்தூரமாய் வெட்க்கிச் சிவக்கிறது
குளக்கரையின் நதியுடல்.

நீ வந்து சேர்ந்தாய்
நெருங்கி நின்றாய்

இப்போது நெல்நாற்றும், நதியும்
காற்றும், கிளிகளும் கம்மாகரையும்
நமைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவைகள் அனைத்தும்
நம் நிலை பார்த்து
வெட்கிக் கண் மூடிக் கொண்டது.

நம்மை இருள் மூடிக்கொண்டது.

0 comments :

Post a Comment

Tricks and Tips