Showing posts with label MoondraamPaal. Show all posts
Showing posts with label MoondraamPaal. Show all posts

Saturday, February 28, 2015

என் கணவா எப்போதடா வீடு திரும்புவாய். நீ கட்டிய தாலி என் மார்பினில் மோதி ஏதேதோ சொல்கிறது. சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென. வந்தாய் பசியோடு சுவைத்தாய் ருசியோடு. பரிமாறினேன் உன்னிடம் பசியமர்ந்தாய் என்னிடம் நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய். என் பசி கேட்டாயா? என் கணவா எழுந்திடு மீதமிருக்கிறது இன்னும்.&nbs...

Sunday, January 25, 2015

என் காது மடல் வருடி நீ இட்ட முத்தத்திலே புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை. காதினில் தொடங்கி கழுத்தேறி வளைந்து பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து மணிக் கழுத்தினில் ஒன்று கீழ் இறங்கி மார்பினில் ஒன்று என நீ கொடுத்த முத்தத்தில் கிறங்கிப்போனேன். என் உடல் மணக்கிறது உன் எச்சிலின் ஏகாந்த வாசம். என்ன வரைகிறாய் என் முதுகினில்....

Saturday, January 24, 2015

என் காதல் கணவா ஏன் இப்படி? காதலிக்கும் போது கை பிடிக்க அனுமதி வேண்டியே அவ்வளவு கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி. என் இதழ் தீண்டாதா என நீ ஏங்கிய நாட்களை நானறிவேன்....

Monday, January 19, 2015

விண்ணவரும் வியந்து போகும் பேரழகு அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு. தரைதொடும் உன் கார் குழலென்ன கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா நிலவினை வெட்டி ஒட்டி வைத்ததுதானா உன் நெற்றி பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள் புலியெனப் பாயவரும் என்னை சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து எனை அடக்குவதென்ன....

Saturday, January 10, 2015

உனை எதிர்பார்த்து காத்திருந்தேன். அழகான அந்தி நேரம் கருவேலங் கம்மாக்கரை ஓரம். அழகாய் சலசலக்கிறது நீரோடை கரையினை வந்து வந்து தழுவியபடி. ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில். காற்றாய் வந்த காதலன் தீண்டிய தீண்டலுக்கெல்லாம...
தாமரை பூங்குளத்தினிலே தங்கம் நீ குளிக்கையிலே அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி ஓடி வந்து உன பாக்கயிலே. மாரளவு தண்ணியிலே மகராசி நீ குளிக்கையிலே தன்னழகு கொரஞ்சதா என்னி அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும். உன் மேலாடையானது பாவாடை உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை. பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூ...
கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது. தேகமெங்கும் பனி உறையுது நீ தொட்ட மாத்திரத்தில், ஆடை போல அம்புட்டும் உருகுது. அங்கமெல்லாம் அனல் பரவுது. பனிமலரா நானிருக்க பகலவனா என நீயுருக்க கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது....
எங்கோ சிதறிக்கிடந்த உள் அணிபவைகளையும் கணவன் போர்த்திப் படுத்திருக்கும் தன் சேலையையும் தேடி எடுத்து அணிந்து கொண்டாள். கலைந்த கார் கூந்தலையும் அள்ளி முடிந்து கொண்டாள். அழகாய் சிரிக்கிறாள் அம்மணக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்து. அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள் அவனைப் பார்த்து ரசித்தபடியே. "கடை கடையாய் ஏறி இறங்கி ரசனையாய் வாங்கி வந்து அணியச்சொல்லி அழகு பார்க்கிறான் பகலிலே. ஆனால்...

Tuesday, December 30, 2014

அணைக்கப்பட்டன விளக்குகள் எரிகிறது மெழுகு ஒன்று என்னைப்போலவே உருகியபடி. வெளிச்சத்தில் திரைமறைவில் இருந்தவற்றை எல்லாம் இருள் வெளிச்சம் போட்டு காட்டியது. இருநிலவினை மறைத்த இருள்மேகமும் விலகியது. ஆடைகள் எல்லாம் அடுத்தவர்முன்தானே என்றேன். ஆமோதித்தாள் வெட்கம் எனும் உடையவிழ்த்து. உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு. நீ கூறிய வார்த்தைகள் தேன் ஆதலால் செவிமடுத்தேன் உனைஎடுத்தேன்...
பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன் தனிமை சுடும் என, ஆனால் அந்த அனல் என்னையும் வந்து வாட்டுமென எண்ணவில்லை. நாம் சேர்ந்திருந்த உறைபனிப் பொழுதுகளிலெல்லாம், தனிமையில் குளிர்காயவே மனம் நினைத்தது. ஆனால் மணம் நினைப்பதெல்லாம் மெய்ப்படுவதில்லையே! தனிமை இதமாகதானே இருக்கும் என்றெண்ணிய என் எண்ணமெல்லாம் (எண்ணம் எல்லாம்) சாம்பலானது தனிமைத்தீயினில். மீண்டும் உறைய வேண்டும் உன் பனிப் பார்வையில், உடனுறைய வேண்டும்...
அதிகாலையில் காணக்கிடைக்கும் யாருமற்ற சாலையின் அழகு, சேலைக்குள் ஒளிந்திருக்கும் பூவையின் வளைவு நெளிவு! மிதமாக பயணி  ரசிக்கலாம் பயணத்தை இரண்டிலுமே...

Monday, December 29, 2014

அந்தி சாயும் அழகிய பொழுதினிலே வீடு திரும்புகிறான், ஒயிலான மனைவியுடன் வெயிலாக கோபித்துச் சென்ற வானவன். பொய்க்கோபத்துடன் காத்திருக்கிறாள் புவிமகளும். அடித்த கை அணைக்கவும் வரும் என்று. மெதுவாக நெருங்குகிறான் வானவன் நிலமகளை நோக்கி, ஆயினும் பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல் இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே. எப்படி தொடங்குவது என்றென்னியவன் வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை. காத்திருந்தவள் தானே அவளும், உடனே செவிமடுக்கிறாள். இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள் வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க. அமைதியாக...
நேற்றொரு அழகிய  மாலை பொழுதில் பார்த்தேன்  அழகான வெண்பஞ்சு மேகங்களுடன்  கார்மேகம் கலவி கொள்வதை . . . இறுதியில் பொழிந்தது மழை நனைந்தது தான்  தற்போதிய நிலை....
நேற்று நானும்  அவளும் செல்கையில்  சரியான மழை  இருவரும் நனைந்தோம் ... அவள் மழையிலும்  நான் அவளிளும்.....
முன்பெல்லாம் முழுவதுமாய்  என்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட என் படுக்கையில் இப்போது இடப்பக்கமாய்  ஓர் இடம் விட்டு  படுக்கின்றேன் உன்னக்காக ..... தவறாக நினைக்க வேண்டாம் கனவில் வரும் நீ  கண்ணயர்ந்தால் பள்ளி கொள்ளவே ....
அடிப்புறம் என் மடிசேர்த்து தலைப்புறம் என் தோள் சாய்த்து  நடுப்புறம் தந்தியினை என் என் விரல் மீட்ட மோக ராகமிசைக்கும்  ...வீணையடி நீ எனக்க...
மூங்கிலில் மட்டும்தான் குழலிசை இசைக்கமுடியுமா? என்னவள் என் மூச்சுக் குழலிலும் தான் இசைக்கிறாள் முத்தத்துவாரம் வழியாக. என்ன, ஒரே ஒரு வித்தியாசம் முதல்சொன்னதில் உள்சென்று  இசைதந்த காற்று  இரண்டாவதில் உறிஞ்சப்பட்டுஇசைதருகிறது...
விடிந்ததும் காணக்கிடைத்தது முழுவதுமாய் சிவந்திருந்த உன் உடல்... அது அந்திச்சூரியனை இரவில் விழுங்கிய கடல்.....
மழையில் நீ விளையாடுவதை பார்க்கும் பொழுது... மழை என்பதே  உன்னை தொட்டு விளையாட  வருணன் ஏற்படுத்திக் கொண்ட ஓர் வழிவகை தானோ!...என்று என்னதோனுகின்றது... மழைபெய்யும் பொழுது நனைவதுமரங்களும், மனிதர்களும்இப்புவியில் உள்ளஇன்னபிற பொருட்களும் மட்டுமல்லாதுநேசம் கொண்ட இரு உள்ளங்களும் தானே! நம்மைத்தவிர வேறு எவரோருவரால்இந்த மழையின் ஒவ்வொரு துளிகளையும்ருசித்திருக்க முடியும்... நனைவது அழகாஇல்லை நனைவதை ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்உன்னை நனைவிப்பது தான் அழகு என்றுஜோராய்...
நீ சேலை கட்டிகொண்டால் வானில் கார்மேகக் கூட்டங்கள்.  உன் புடவையின் சிறு விலகல்கள், அழகிய சிறு தூறல்கள். நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும், ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்....
Tricks and Tips