Showing posts with label Tamizhkavi. Show all posts
Showing posts with label Tamizhkavi. Show all posts

Sunday, March 8, 2015

இதுவரை எத்தனையோ நபர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர் ஆனால் உன் குரலில் இனித்தது போல் பிறிதோர் குரலில் இனிக்கவில்லை. என்னை எனக்கே அழகாய் காட்டிய மாயக் கண்ணாடி நீ. உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான். என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன். மோகிக்கும் நேரங்களில் உன்னிடம் நான் சேயாகிறேன் காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில் நீ எனக்கு தாயாகிறாய். கல்லையும்...

Friday, March 6, 2015

பெண்களே!!! சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள். ஒரு காலத்தினில், ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள் இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள். சமையலறை தாண்டாத நீங்கள் இன்று சந்திராயனிலும் சாதித்தீர்கள். அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள் நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள். ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள் இன்று அரசாளுகிறீர்கள். ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று ஒப்பிலாப்...

Saturday, February 28, 2015

என் கணவா எப்போதடா வீடு திரும்புவாய். நீ கட்டிய தாலி என் மார்பினில் மோதி ஏதேதோ சொல்கிறது. சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென. வந்தாய் பசியோடு சுவைத்தாய் ருசியோடு. பரிமாறினேன் உன்னிடம் பசியமர்ந்தாய் என்னிடம் நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய். என் பசி கேட்டாயா? என் கணவா எழுந்திடு மீதமிருக்கிறது இன்னும்.&nbs...

Saturday, February 14, 2015

உன்னிடம் சொல்லாத வார்த்தைகள் என் கவிதைகளின் வரிகளாகின்றன உன்னிடமும் சொல்லியிருக்கிறேன் ஆனால் அதை நீ ரசிக்கவில்லை என் கவிகளுக்கு வரிகளானபின் அவை கொண்டாடப்படுகின்றன. . . . பல காதலிகளால...

Saturday, February 7, 2015

பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன் அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன். வழியெங்கும் நாணல் பூ வெண்சாமரம் வீசக்கண்டேன். அயிரை மீன்கள் அணிவகுத்தென் அடிப் பாதம் தீண்டக் கண்டேன். தாழப் பறக்கும் மீன்கொத்தி தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன். நான் நதியாகிப் போனேன். காலைப் பொழுது தனில் சோலை மரங்கள் என் மேல் பூக்களை வாரி இறைப்பது கண்டேன்....

Wednesday, February 4, 2015

ஒரு விடுமுறை தினம் எனது கிராமத்து பேருந்து நிலையம். துண்டால் தலை பொத்தி குத்தவைத்து இருமிக்கொண்டே ஒரு பெரியவர். அவரருகினில் அவரின் மனைவி வந்ததிலிருந்து அவரை திட்டியபடியே இருக்கிறாள். "நீயெல்லாம் இன்னும் உசுர வச்சுட்டு என்னத்துக்கு இருக்குர பூமிக்கு பாரமா. வயசுல குடியும் கூத்தியாளும்னு கும்மாளம் போட்ட இப்ப சீக்கு வந்து கஞ்சி ஊத்தகூட நாதியில்லாம திரியுற. பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும் ஒரைக்லையா...

Monday, January 26, 2015

அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள் நம்மை மன்னன் ஆண்டான் மாற்று தேசத்தான் ஆண்டான் இது நாம் ஆண்டுகொண்டிருக்க வேண்டிய தருணமிது. ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு ஆனாலும் இன்றளவும் நமை ஆள்வது நாம் தானா....

Sunday, January 25, 2015

என் காது மடல் வருடி நீ இட்ட முத்தத்திலே புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை. காதினில் தொடங்கி கழுத்தேறி வளைந்து பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து மணிக் கழுத்தினில் ஒன்று கீழ் இறங்கி மார்பினில் ஒன்று என நீ கொடுத்த முத்தத்தில் கிறங்கிப்போனேன். என் உடல் மணக்கிறது உன் எச்சிலின் ஏகாந்த வாசம். என்ன வரைகிறாய் என் முதுகினில்....

Saturday, January 24, 2015

என் காதல் கணவா ஏன் இப்படி? காதலிக்கும் போது கை பிடிக்க அனுமதி வேண்டியே அவ்வளவு கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி. என் இதழ் தீண்டாதா என நீ ஏங்கிய நாட்களை நானறிவேன்....

Monday, January 19, 2015

விண்ணவரும் வியந்து போகும் பேரழகு அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு. தரைதொடும் உன் கார் குழலென்ன கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா நிலவினை வெட்டி ஒட்டி வைத்ததுதானா உன் நெற்றி பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள் புலியெனப் பாயவரும் என்னை சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து எனை அடக்குவதென்ன....

Wednesday, January 14, 2015

எழுவாய் தமிழனே எழுவாய்! வந்துவிட்டது தைத் திருநாள். வாசனை திரவியங்கள் மணக்கும் மேனி கொண்ட நமக்கு கருக்கலில் கண்விழித்து காளை பூட்டி ஏர் உழ நெற்றி வியர்வை நிலத்தில் விழ முப்போகம் விளைவித்தவனின் முன்னுரை தெரியுமா? அரிசியினை அன்னமாய் மட்டுமே அறிந்த நமக்கு நெல்லினை தெய்வமாகவும் அரிசியினை பிரசாதமாகவும்...

Sunday, January 11, 2015

என்ன செய்வது மீசை முளைக்கும் முன்னமே ஆசை முளைத்து விடுகின்றது. பாடங்கள் பதியாத என் மனதினில் பாவை உந்தன் முகம் மட்டும் பார்த்த கனமே ஒட்டிகொண்டது. உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே பாடங்களின் தலைப்பை மட்டும்  பதிந்து கொண்டேன். கரும்பலகையினில் எழுதி ரசித்தேன் உன் பெயரினை, கார் வானில்  கண்ட முழுநிலவென. ...

Saturday, January 10, 2015

உனை எதிர்பார்த்து காத்திருந்தேன். அழகான அந்தி நேரம் கருவேலங் கம்மாக்கரை ஓரம். அழகாய் சலசலக்கிறது நீரோடை கரையினை வந்து வந்து தழுவியபடி. ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில். காற்றாய் வந்த காதலன் தீண்டிய தீண்டலுக்கெல்லாம...
தாமரை பூங்குளத்தினிலே தங்கம் நீ குளிக்கையிலே அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி ஓடி வந்து உன பாக்கயிலே. மாரளவு தண்ணியிலே மகராசி நீ குளிக்கையிலே தன்னழகு கொரஞ்சதா என்னி அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும். உன் மேலாடையானது பாவாடை உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை. பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூ...
கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது. தேகமெங்கும் பனி உறையுது நீ தொட்ட மாத்திரத்தில், ஆடை போல அம்புட்டும் உருகுது. அங்கமெல்லாம் அனல் பரவுது. பனிமலரா நானிருக்க பகலவனா என நீயுருக்க கூதலடிக்குது கூதலடிக்குது கூடிக் கலவ சொல்லி கூதலடிக்குது....
எங்கோ சிதறிக்கிடந்த உள் அணிபவைகளையும் கணவன் போர்த்திப் படுத்திருக்கும் தன் சேலையையும் தேடி எடுத்து அணிந்து கொண்டாள். கலைந்த கார் கூந்தலையும் அள்ளி முடிந்து கொண்டாள். அழகாய் சிரிக்கிறாள் அம்மணக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்து. அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள் அவனைப் பார்த்து ரசித்தபடியே. "கடை கடையாய் ஏறி இறங்கி ரசனையாய் வாங்கி வந்து அணியச்சொல்லி அழகு பார்க்கிறான் பகலிலே. ஆனால்...

Friday, January 9, 2015

கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு கண்காணாம போன புள்ள. கண்ணு ரெண்டும் தூங்கவில்ல  கட்டியணைக்க வாடி புள்ள. உனயென்னி நெதந்துடிக்கிறேன்  கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன். சோறு தண்ணி எறங்கவில்ல ஏஞ்சோகமின்னும் தீரவில்ல. வட்டிசெம்பு வெளக்கவில்ல வாசப் பெருக்கி கூட்டவில்ல. எந்தாயி நீயில்லாம  கொழம்பிப் போய் கெடக்குறேனே  தெளிய வைக்க வாடி புள்ள. நீ குடுத்த பால்...

Friday, January 2, 2015

பெருவெளிச்சமில்லை ஆனால் அருகில் வருபவர்களை காணலாம். பிம்பங்களாய் தெரிகின்றன மரங்களும் தூரத்து மலைகளும். கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள் ஊரின் முதல் உழைப்பாளிகள், தொடங்கிவிட்டனர் வேலையை காவென கரைந்துகொண்டே. ஆள் அரவமற்ற அழகிய சாலையில் தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது அழகு மைனாக்கள். கருப்பு வெள்ளையாய் தெரிகிறது ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன் உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும். மின்சாரக்கம்பிகளும்...

Wednesday, December 31, 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள் வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை நான் வாழ்த்துகின்றேன். உழவு என்றொரு வேத வார்த்தையினையே அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா அதற்காக வாழ்த்துகின்றேன்! இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ ஆனால் நான் உண்ணும் வகைவகையான உணவிலும், ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும் பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்! உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும் அவன் பிடித்த கலப்பை...
மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம் மறவா நோய் வருவதும் தான் வயோதிகம். தான் பெற்ற பிள்ளை தன்னை அநாதை இல்லத்தில் விட்டதையும் தன் மகளுக்கு தான் எப்படி பாரமாணோம் என்பதையும் வயதான காலத்திலும் தன்னைக் காக்கும் பிள்ளைகளையும் மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது. ஓடியாட முடியாத அவர்களின் மனதில் நினைவோட்டம் ஆயிரங்கள் வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால் அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள...
Tricks and Tips