Wednesday, February 4, 2015

ஒரு விடுமுறை தினம் எனது கிராமத்து பேருந்து நிலையம். துண்டால் தலை பொத்தி குத்தவைத்து இருமிக்கொண்டே ஒரு பெரியவர். அவரருகினில் அவரின் மனைவி வந்ததிலிருந்து அவரை திட்டியபடியே இருக்கிறாள். "நீயெல்லாம் இன்னும் உசுர வச்சுட்டு என்னத்துக்கு இருக்குர பூமிக்கு பாரமா. வயசுல குடியும் கூத்தியாளும்னு கும்மாளம் போட்ட இப்ப சீக்கு வந்து கஞ்சி ஊத்தகூட நாதியில்லாம திரியுற. பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும் ஒரைக்லையா...

Monday, January 26, 2015

அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள் நம்மை மன்னன் ஆண்டான் மாற்று தேசத்தான் ஆண்டான் இது நாம் ஆண்டுகொண்டிருக்க வேண்டிய தருணமிது. ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு ஆனாலும் இன்றளவும் நமை ஆள்வது நாம் தானா....

Sunday, January 25, 2015

என் காது மடல் வருடி நீ இட்ட முத்தத்திலே புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை. காதினில் தொடங்கி கழுத்தேறி வளைந்து பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து மணிக் கழுத்தினில் ஒன்று கீழ் இறங்கி மார்பினில் ஒன்று என நீ கொடுத்த முத்தத்தில் கிறங்கிப்போனேன். என் உடல் மணக்கிறது உன் எச்சிலின் ஏகாந்த வாசம். என்ன வரைகிறாய் என் முதுகினில்....

Saturday, January 24, 2015

என் காதல் கணவா ஏன் இப்படி? காதலிக்கும் போது கை பிடிக்க அனுமதி வேண்டியே அவ்வளவு கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி. என் இதழ் தீண்டாதா என நீ ஏங்கிய நாட்களை நானறிவேன்....

Monday, January 19, 2015

விண்ணவரும் வியந்து போகும் பேரழகு அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு. தரைதொடும் உன் கார் குழலென்ன கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா நிலவினை வெட்டி ஒட்டி வைத்ததுதானா உன் நெற்றி பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள் புலியெனப் பாயவரும் என்னை சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து எனை அடக்குவதென்ன....
Tricks and Tips