Saturday, January 10, 2015













தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே

அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.

மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே

தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.

உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.

பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூட


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.

தேகமெங்கும் பனி உறையுது
நீ தொட்ட மாத்திரத்தில்,

ஆடை போல அம்புட்டும் உருகுது.
அங்கமெல்லாம் அனல் பரவுது.

பனிமலரா நானிருக்க
பகலவனா என நீயுருக்க


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.




எங்கோ சிதறிக்கிடந்த
உள் அணிபவைகளையும்
கணவன் போர்த்திப் படுத்திருக்கும்
தன் சேலையையும்
தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

கலைந்த கார் கூந்தலையும்
அள்ளி முடிந்து கொண்டாள்.

அழகாய் சிரிக்கிறாள்
அம்மணக் குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனைப் பார்த்து.

அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள்
அவனைப் பார்த்து ரசித்தபடியே.

"கடை கடையாய் ஏறி இறங்கி
ரசனையாய் வாங்கி வந்து
அணியச்சொல்லி அழகு பார்க்கிறான்
பகலிலே.
ஆனால் அழுக்குப் பையன் இவன்
இரவு வந்தால் களைந்து விடுகிறான்
பகலணிவித்தவைகளை.
கேட்டால் என்னை அணிந்து கொள்ளேன்
என்பான் என் கலையழகு புருசன்.

இவனை கடிந்து கொள்வதா
இல்லை கட்டிக்கொள்வதா"

நீங்களே சொல்லுங்களேன்...!



Friday, January 9, 2015



கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு
கண்காணாம போன புள்ள.

கண்ணு ரெண்டும் தூங்கவில்ல 
கட்டியணைக்க வாடி புள்ள.

உனயென்னி நெதந்துடிக்கிறேன் 
கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன்.

சோறு தண்ணி எறங்கவில்ல
ஏஞ்சோகமின்னும் தீரவில்ல.

வட்டிசெம்பு வெளக்கவில்ல
வாசப் பெருக்கி கூட்டவில்ல.
எந்தாயி நீயில்லாம 
கொழம்பிப் போய் கெடக்குறேனே 
தெளிய வைக்க வாடி புள்ள.

நீ குடுத்த பால் சொம்பு 
மூலையில உருளுது.

ஓன் நெனப்பு மட்டுமே 
என் மூளையில பொரலுது.

கயித்துக்கட்டில் உன்ன 
கண் தேடுதடி 
ரவைக்குள்ள வந்துருடி...

Friday, January 2, 2015


பெருவெளிச்சமில்லை
ஆனால் அருகில் வருபவர்களை காணலாம்.

பிம்பங்களாய் தெரிகின்றன
மரங்களும் தூரத்து மலைகளும்.

கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள்
ஊரின் முதல் உழைப்பாளிகள்,
தொடங்கிவிட்டனர் வேலையை
காவென கரைந்துகொண்டே.

ஆள் அரவமற்ற அழகிய சாலையில்
தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது
அழகு மைனாக்கள்.

கருப்பு வெள்ளையாய் தெரிகிறது
ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன்
உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும்.

மின்சாரக்கம்பிகளும் ரசிக்கப்படுகிறது
சிட்டுக்கள் அமர்ந்து சிலிர்ப்பூட்டும்
குளிர் பொழுதுதனில்.

இயல்பாய் ரசிக்கவைக்கிறது
மீன்வால் குருவிகளும்
ஏகபாதமாய் நின்று இரைதேடும் வெண்நாரைகளும்.

பச்சைமேணி வயல்வெளிகள் எங்கும்
வெண்திட்டுகளாய் பனித்துளிகள். இவை
வானும் மண்ணும் சங்கமித்ததின்
பொருளுணர்த்தும் காதல் மொழிகள்.

சுவாசம் நிறைக்கின்றது
மாசில்லா பிராணவாயு.

நிசப்தம் கலைக்கின்றது பறவைகளின் சப்தம்
அது பகல்பொழுதின் பேரிரைச்சலுக்கெதிரான
மௌன யுத்தம்.

இந்த நாளுக்கான முதல் குளியலை ஏற்றுக்கொள்கிறது
தெளிந்த நீரோடையொன்று.

தண்ணீர் தெளிக்கும் தாவணிப்பெண்கள் தனியழகு.
புள்ளிமான்கள் இட்ட புள்ளிக்கோலம் பேரழகு.

மிதிவண்டி மிதித்துவருகிறார் பால்காரர்
தூக்கம் மிதக்கும் கண்களோடு,
பலரும் படுக்கையிலிருந்து துயில்கலைக்க.

அனைத்திற்கும் உச்சமென காணக்கிடைக்கின்றது
கதிரவனின் கீட்ரொளி அழகு
தாமரை இலையினில் பட்டுத்தெறித்து.

எப்படி உறங்கிகிடந்தேன் இத்தனை நாளாய்
இப்படியொரு அதிகாலையின் பேரழகை காணாமல்.
Tricks and Tips