Sunday, January 11, 2015
Saturday, January 10, 2015
10:31 PM
Unknown
உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.
அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.
ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.
காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம்
9:54 AM
Unknown
எங்கோ சிதறிக்கிடந்த
உள் அணிபவைகளையும்
கணவன் போர்த்திப் படுத்திருக்கும்
தன் சேலையையும்
தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.
கலைந்த கார் கூந்தலையும்
அள்ளி முடிந்து கொண்டாள்.
அழகாய் சிரிக்கிறாள்
அம்மணக் குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனைப் பார்த்து.
அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள்
அவனைப் பார்த்து ரசித்தபடியே.
"கடை கடையாய் ஏறி இறங்கி
ரசனையாய் வாங்கி வந்து
அணியச்சொல்லி அழகு பார்க்கிறான்
பகலிலே.
ஆனால் அழுக்குப் பையன் இவன்
இரவு வந்தால் களைந்து விடுகிறான்
பகலணிவித்தவைகளை.
கேட்டால் என்னை அணிந்து கொள்ளேன்
என்பான் என் கலையழகு புருசன்.
இவனை கடிந்து கொள்வதா
இல்லை கட்டிக்கொள்வதா"
நீங்களே சொல்லுங்களேன்...!
Subscribe to:
Posts
(
Atom
)