Wednesday, January 14, 2015

எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு

கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?

அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்

Sunday, January 11, 2015














என்ன செய்வது
மீசை முளைக்கும் முன்னமே
ஆசை முளைத்து விடுகின்றது.

பாடங்கள் பதியாத என் மனதினில்
பாவை உந்தன் முகம் மட்டும்
பார்த்த கனமே ஒட்டிகொண்டது.

உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே
பாடங்களின் தலைப்பை மட்டும் 
பதிந்து கொண்டேன்.

கரும்பலகையினில் எழுதி ரசித்தேன்
உன் பெயரினை, கார் வானில் 
கண்ட முழுநிலவென.

Saturday, January 10, 2015


























உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.

அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.

ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.

காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம்












தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே

அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.

மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே

தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.

உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.

பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூட


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.

தேகமெங்கும் பனி உறையுது
நீ தொட்ட மாத்திரத்தில்,

ஆடை போல அம்புட்டும் உருகுது.
அங்கமெல்லாம் அனல் பரவுது.

பனிமலரா நானிருக்க
பகலவனா என நீயுருக்க


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.


Tricks and Tips