Monday, December 29, 2014

சொர்கத்தின் மினியெட்சர் நீயாக...
அந்தக் கண்ணன் வாய் திறந்து
அகிலத்தை காட்டியதை நானிருந்து பார்த்திலேன்.
ஆனால் பால் மனம் வீசும் உன் 
குமுதவாய் இதழ் விரித்த பொழுதினில் அதில்
எனக்கான உலகத்தை பார்க்கிறேன்.
உன் பிஞ்சு விரலால் எனைப் பற்றுகையில்
என் இறைவனே எனைத் தீண்டும் இறைமையை உணர்கிறேன்.
என்னிரு விரலில் உன் ஒரு பாதம் நிறைந்து விடுகிறது
இந்த பூம்பாதத்தில் என் உலகமே அடங்கிவிடுகிறது.
பிறந்து மூன்று நாட்களே ஆன உனக்கின்னும்
கழுத்து நிற்கவில்லை - இது இயல்பு
ஆனால் உனைக்கண்ட நாளிலிருந்தே நான்
இப்புவியிலே நிலைகொண்டு நில்லாதது போன்றொரு மிதப்பெனக்கு.
பூவுலகில் ஒழுங்காக வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கத்தில் இடமாம்,
நான் ஒழுங்காக வாழ்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்த சொர்கதையே இறைவன் எனக்கென பரிசளிதிருக்கிறான் - நீயாக
கவிஞன்...
இவன்,
காதலையும் கண்ணீரையும் ஒருசேர ருசித்து பழகியவன்.
பாடுபொருளாக தன் பாடுகளையே பதிப்பவன்
சமூக அவலங்களை கரம் கொண்டும் மிதிப்பவன்.
இவன்,
குளிரில் வியர்ப்பவன்
வெய்யிலில் குளிர்பவன்
தன் எழுத்துக்களால் ஒளிர்பவன்.
பள்ளியிலே காதல் பயின்றவன்
விடலையிலே விரகம் இயற்றியவன்
கூடல் பொழுதுகளில் குளிர்காய்பவன்
பந்தக்கூட்டில் சிக்கியபின்
தன் வறுமையை, மனம் கொண்ட வெறுமையை
எழுத்துகளில் விற்ப்பவன்.
செல்வம் குறைந்தவன்
சொல்வளம் நிறைந்தவன்.
காதல் இயற்ற பெண்மோகம் கொள்பவன்
கருத்தாய் தான்பிறந்த மண்மீது
தணியாத தாகம் கொள்பவன்.
தாய் சொன்ன தமிழ் கேட்டு
தமிழே தன் தாயென்பவன்
தமிழ் சொல்லி தாயும் ஆனவன்.
எழுத்தாள்பவன்
எரிமலையிவன்
எழுந்தோங்கி நிற்ப்பவன்
எந்நேரமும் தமிழேக்கம் கொண்டவன்.
ஏட்டிக்கு போட்டியென பேசினாலும்
எதுகை மோனை காப்பவன்.
படுக்கை அறையிலும் பாடல் இயற்றுபவன், இவன்
முதலிரண்டு பாலையும் படித்து மறந்து
மூன்றாம் பாலிலே மூழ்கித் திளைப்பவன்.
மண்ணின் மணத்தை
பேனா மை கொண்டு .மலரச்செய்பவன்.
பேரானந்தத்தையும் பெருஞ்சோகத்தையும்
இயற்றும் பொழுதுகளிளெல்லாம் இயம்புவன்.
வாழ்கையின் எல்லா பரிமாணங்களையும்
வார்த்தைகளின் மூலமாக வாழ்கின்றவன்
ஆள்கின்றவன் .
வரிகளுக்கேற்ப வாழ்ந்துகொண்டிருப்பதால்
இன்பத்தில் ஆடாதவன்
துன்பத்தில் துவண்டுவிடாதவன்.
நிராகரிக்கப்படுகையில் சாணக்கியன்
பேர் புகழ் பெற்றாலும் சாமானியன்.
தலைசாய்ந்தாலும் தமிழென்பதால் என்னவோ
பலரின் பார்வைக்கு கிருக்கனிவன்.
முண்டாசுக்கவிஞனின் வழித்தோன்றலாகையால்
தமிழுக்கோர் பாரதியிவன்
தமிழ்தேருக்கோர் சாரதியிவன்.
எழுத்துக்களாலே பேசுவதாலென்னவோ
வாய்திறவா வள்ளுவன் இவன்!























இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.
ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!
அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.
ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!
நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.
ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?
இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.
எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!
எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.
எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?
மரத்தவச்சவன் தண்ணீயுத்துவான்..
என்றெழுதினாய்.
எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!
இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.
இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.
இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.
- ஃபீனிக்ஸ் பாலா
நீ சேலை கட்டிகொண்டால்
வானில் கார்மேகக் கூட்டங்கள். 

உன் புடவையின் சிறு விலகல்கள்,
அழகிய சிறு தூறல்கள்.

நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும்,
ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்...
நனைவது அழகா
இல்லை நனைவதை
ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால்
உன்னை
நனைவிப்பது தான்
அழகு என்று
 
ஜோராய் பொழிந்து
கொண்டிருக்கிறது இந்த வானம்...
Tricks and Tips