Showing posts with label Tamizhkavi. Show all posts
Showing posts with label Tamizhkavi. Show all posts

Wednesday, December 31, 2014



முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன்
ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும்.

ஆனபோதிலும் அதைத்தாண்டி
ஆனந்தம் தருவது, அதுமுடிந்த
விடுமுறை நாட்களில் வரும்
ஊர்த்திருவிழா தான் !!!

காப்புக்கட்டிய நாளிலிருந்தே
மனம் லயிக்கும், மணம் பரப்பும்
அப்படியொரு மகரந்த வாசம்.

அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும்,
ஆடித்திங்கள் முழுமைக்குமென
வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும்,
தென்னங்குழையும், பந்தலில்
தொங்கும் பலா வகையும்,
சரம் சரமாய் சாத்துக்குடி வகையறாக்களும்,
பந்தலில் பளிச்சிடும் பப்ளிமாஸ் பழங்களும்,
கூந்தப்பனை தோரணமும், தார் தள்ள
வாழை மரம் கட்டிய காரணமும்
ஊர்த்திருவிழா தான் !!!

அல்லிநகரத்து மைக்செட்டும்
காதை கிழிக்கும் ஒலிபெருக்கிகளும்
தனிக் கங்கென தகிக்கும் சீரியல் செட்டுகளும்
கால்பந்து விளையாடும் யானை லைட்செட்டும்
சாலை நடுவே ஓங்கி ஒளிரும் அம்மன் ஆர்ச் சீரியலும்
சுவரெங்கும் பசை காயாத போஸ்டர்களும்
அழகாக மாற்றிவிடும் தெருவையே
ஓர் இரவிலே!

மூங்கில் வெட்ட கும்பக்கரை
பழவேட்டைக்கு சோத்துப்பாறை
மூங்கில் சுமந்துவரும் வண்டி கொடுத்த அலப்பரை
அந்த நாளில் நாங்கள் அறிந்ததில்லை
ஆனந்ததிற்கு வரைமுறை.

வெள்ளனா எழுந்து
வெண்ணீரில் குளித்து
புதுத்துணி அணிந்து, அன்றுண்ட
அம்மா சுட்ட இட்டலியும்,
மல்லிச்சட்டினியும் மனம் மறக்கவில்லை இன்னமும்.

கரகத்தில் ஆடிவரும் அம்மனின் அழகும்
அரிவாள் மேல் ஆடிவரும் கருப்பனின் மிரட்டல் தொனியும்
பயபக்தி (பயத்தினால் வந்த பக்தி) பொழுதுகள்.

சாயங்காலம் சரக்கடித்து
சண்டையில் சட்டை கிழிந்து
சாக்கடையில் பிரண்டெழுந்து, விடிந்ததும்
நெற்றியில் பட்டையும்,
மல்லுவேட்டி சட்டையும்
அணிந்துவரும் சண்டியர்கள்
சிரிப்பூட்டும் இம்சை அரசர்கள்.

மூன்று நாள்கழித்து மறுபூசை
ராகம் ராகமாய் ராட்டினங்கள்
வேடிக்கை பார்க்க மட்டுமென திருவிழா கடைகள்
ஆடியேந்தி வரும் அலங்கரித்த தீச்சட்டிகள்
அரைகுறை ஆடையில் ஆடும் கரகாட்டகாரர்கள்
மதுரை கலைநிலா குழுவினரின் ஆடலும்பாடலும்
அப்பப்பா!!!

ஓர் கனவு வந்து கிளருகிறது
பள்ளிப்பருவத்தோடு புதைந்துபோன
ஊர்திருவிழாவினை.

இப்படியொரு திருவிழாவையே மறந்தொரு ஊரினில்
பத்துமணிக்கு பிறகெழுந்து
நாயர்கடை சாமியானா பந்தலின் கீழ் நின்று
வெந்தும் வேகாத இட்டலியை
தண்ணீர்ச்சட்னியோடு சேர்த்து விழுங்கிக்கொண்டே
அசைபோடுகின்றேன் ஆழ்தூக்கத்துக்
கனவு கொடுத்த அழகிய நினைவுகளை.

Tuesday, December 30, 2014



அணைக்கப்பட்டன விளக்குகள்
எரிகிறது மெழுகு ஒன்று
என்னைப்போலவே உருகியபடி.

வெளிச்சத்தில் திரைமறைவில்
இருந்தவற்றை எல்லாம் இருள்
வெளிச்சம் போட்டு காட்டியது.

இருநிலவினை மறைத்த
இருள்மேகமும் விலகியது.

ஆடைகள் எல்லாம்
அடுத்தவர்முன்தானே என்றேன்.

ஆமோதித்தாள் வெட்கம்
எனும் உடையவிழ்த்து.

உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை
நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு.

நீ கூறிய வார்த்தைகள் தேன்
ஆதலால் செவிமடுத்தேன்
உனைஎடுத்தேன் , நீ கூறியவை

"நீ தீண்ட நான் சுரப்பேன் அமுதசுரபியாய்
அமுதுண்டு எனை நனைப்பாய் பேரருவியாய்"

சரமாரியாய் பொழிந்த பொழுதிலும்
சந்தோசிக்கிறாய், என் மோக அரக்கி
கொடுப்பாய் உனை உருக்கி.

இதழ் சுளிப்பிலே இன்பமுரைத்தாய்
உதடு கவ்வியே உயிர் குடித்தாய்.

பூவிதழில் மட்டுமா தேன்துளி
செங்காம்புகளும் சொட்டுகின்றதே.

மேடுகளில் ஏறினேன்
சரிவுகளில் சறுக்கினேன்
பள்ளத்தில் புதைந்தேன்.

பாவி புதைகுழி முழுக்க தேன்துளி
இனி எழும்பவா மனம் நினைக்கும்.


பிழையேதும் செய்யாமலே
பிழை செய்தவன் எனப்பட்டேன்.

பழி செய்யவில்லை
பாவம் சுமத்தப்பட்டேன்.

கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன்,
இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன்.

உறக்கம் தொலைத்தேன்
உயிர் இலந்தவனானேன்.

இத்தனை இருந்தும்
இன்னமும் இருக்கிறேன்.

எனக்கும் கொடுக்கலாம்
அமைதிக்கான நோபல் பரிசினை. 


பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்
தனிமை சுடும் என,
ஆனால் அந்த அனல்
என்னையும் வந்து
வாட்டுமென எண்ணவில்லை.

நாம் சேர்ந்திருந்த
உறைபனிப் பொழுதுகளிலெல்லாம்,
தனிமையில் குளிர்காயவே
மனம் நினைத்தது.

ஆனால் மணம் நினைப்பதெல்லாம்
மெய்ப்படுவதில்லையே!

தனிமை இதமாகதானே இருக்கும்
என்றெண்ணிய என்
எண்ணமெல்லாம் (எண்ணம் எல்லாம்)
சாம்பலானது தனிமைத்தீயினில்.

மீண்டும்

உறைய வேண்டும்
உன் பனிப் பார்வையில்,

உடனுறைய வேண்டும் உன்னுடன்
அன்பெனும் ஒரே போர்வையில்.

உடனடித்தேவை என் பாவை.

வந்தனைப்பாயா (வந்து அணைப்பாயா)
தனிமைத் தீயை!!!


விலையுயர்ந்த செல்போனை

விளையாடி முடித்த கையோடு
தொடவந்த தம்பியை அதட்டிய என்னால்,

மாவு பிசைந்த கையோடு எடுக்கவந்த
மனைவியை முறைத்த என்னால்,

அடுப்புக்கரியொட்டி வந்த
அம்மாவிடமிருந்து பத்திரப்படுத்திய என்னால்,

வியர்வைவடிய வந்த அப்பாவிடமிருந்து
விலக்கிய என்னால் முடியவில்லை.

என் பச்சிளம் குழந்தை விளையாடி உடைக்கையில்
வாய்திறக்க.

மேல் கூறிய சுற்றமெல்லாம்
இதை பார்த்து எனைச் சுற்றிநின்று சிரிக்க
அழும் என் குழந்தை கேட்கும் பொழுதினில்
மறுபடியும் கொடுக்கிறேன்.
என் விலையுயர்ந்த செல்போனை
இல்லை! இல்லை!
என் செல்லம் உடைத்த செல்லபோனை.


காற்றில் பறக்கிறது
யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.

அது,
பள்ளிப்பாடம் எழுதிய பாலகனுடயதோ

பருவப்பெண் பழகிய கோலக்கிறுக்கல்களோ

வட்டிக்கணக்கெழுதிய கணவனின் காகிதமோ

வரவு செலவுக்கணக்கெழுதிய மனைவியின் காகிதமோ

விடலை ஒருவனின் முதல் காதல் கடிதமோ

விரக்தியில் எழுதிய மரண சாசனமோ

ஞான கிறுக்கனின் புலம்பல் தத்துவமோ

காதல் கசியும் கவிதைத் தொகுப்போ

காதலின் சாட்சியோ, இல்லை

கண்ணீரின் பாக்கியோ

ஒருவேளை அன்றொரு நாள்
நானிதுபோல் கிருக்கியதோ

யார் அறிவார்!

என் கண்ணெதிரே காற்றில் பறக்கிறது

யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று.

அதிகாலையில் காணக்கிடைக்கும்
யாருமற்ற சாலையின் அழகு,
சேலைக்குள் ஒளிந்திருக்கும்
பூவையின் வளைவு நெளிவு!
மிதமாக பயணி 
ரசிக்கலாம் பயணத்தை இரண்டிலுமே.

ஆங்கிலம்...
அதன் பாஷையிலே சொல்வதென்றால்
தந்தையை டாடியாக்கும்
தாயை மம்மியாக்கும்
தாய் தமிழ் மரபினை டம்மியாக்கும்.
கூழ் குடித்து வாழ்ந்த நாட்களில்
கூடியிருந்தவரெல்லாம் பிரிவினை கண்டனர்
பிட்சா பர்கர் கலாச்சாரத்தில்.
வேண்டும் ஆங்கிலமும்
ஆனால் அளவோடு.
இடைவந்த ஒன்றினுக்காய்
தலைமுறை தாங்கிநின்ற
தனித்தமிழை மறக்கலாமா?
சேலையாய் வேட்டியாய் தமிழுடுத்து
ஆங்கிலமிருக்கட்டும் கைக்குட்டையாய்.
தமிழினமே...
கைக்குட்டை ஒருபோதும்
உன் மானம் காக்காது.
தமிழ்ப்பெண்ணே தமிழுடுத்தி நட
மண்பார்த்து தழைய! தழைய!
உனை பார்த்து
உன் குலம் தழைய.


வேண்டாம்! வேண்டாம்!!!
இனியொரு பிறவி மானிடனாய்.
அதுவும் ஆண்மகனாய்,
அதிலும் தலைமகனாய்.

நினைத்த மாத்திரத்தில் 
கிடைத்தவை எல்லாம்
நினைத்த மாதிரி நிலைப்பதில்லை.
வாழ்க்கை அதன் அத்துணை முகங்களையும்
காட்டிவிட்டது பல பரிமாணங்களில்.

நான்...
தோற்றப்பிழையா?, 
இல்லை காட்சிப்பிழையா...?

வாழ்கையெனும் நாடகமேடையில்
நடிக்கத் தெரிந்தவன் வாழ்கிறான்.
ஒத்திகை இல்லாமல்
நடக்கிறது அரங்கேட்ரமொன்று.
மேடையேற வழிகொடுத்த நீ ஏன்
இறங்க நினைக்கையில் வழியடைக்கிறாய்!

பீஷ்மரைப்போல் எனக்கும் வரமளி
நினைத்தவுடன் மரித்துவிட.

பணம் சம்பாதிக்காத எந்த திறமையும்
மதிக்கபடுவதில்லை இங்கே!

நீ மட்டும் அமைதி காப்பதேன் அங்கே!
மனிதனாய் நீ அவதரித்த போதிலும்
உன்னையும் அவமதித்து
அழித்தது தானே நீ படைத்த
இந்த நல்லுலகம்.

ஓ!!! இறைவனே 
இந்த மானுடப்பிறவி, நீ
எனக்களித்த வரமா? இல்லை, சாபமா?


Monday, December 29, 2014

அந்தி சாயும் அழகிய பொழுதினிலே
வீடு திரும்புகிறான்,
ஒயிலான மனைவியுடன்
வெயிலாக கோபித்துச் சென்ற வானவன்.
பொய்க்கோபத்துடன் காத்திருக்கிறாள்
புவிமகளும்.
அடித்த கை அணைக்கவும் வரும் என்று.
மெதுவாக நெருங்குகிறான் வானவன்
நிலமகளை நோக்கி, ஆயினும்
பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல்
இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே.
எப்படி தொடங்குவது என்றென்னியவன்
வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை.
காத்திருந்தவள் தானே அவளும்,
உடனே செவிமடுக்கிறாள்.
இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள்
வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க.
அமைதியாக பொழிய ஆரம்பிக்கின்றான்
அந்திச் சாரலாய்.
தொடக்கத்தில் சூடு காட்டியவள் இப்போது
நிலம் (உளம்) குளிர்கின்றாள்.
எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் பொழிவான்.
சூடுபிடிக்க தொடங்கியது சாரல்
அடைமழையானது அந்திமழை.
தன் குளிர்க் கரத்தால் தழுவி நிலமகளின்
மண்வாசனை(பெண்வாசனை) நுகர்கிறான்.
வெகுநேரமாய் தொடர்கிறது இதே நிலை.
அந்திமழை அடைமழையானது,
அவளுடல் ஆறுகாவிரியானது,
இருவரும் மூழ்கியே போய்விட்டனர் இன்பக்கடலிலே.
இருந்தபோதிலும்,
பொழிவதை நிறுத்திக்கொள்ள இவனுக்கும் மனமில்லை
இன்னமும் நீர்கொள்ள இவளுக்கும் தயக்கமில்லை.
இயற்கைகென்று ஒரு நியதி உண்டு தானே!
அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை.
அப்பாடா!
ஒருவழியாக நீர்தீர்ந்து போக
மேகம்(மோகம்) களைந்தான் வானவன்.
மழை ஏந்திய களைப்பில் மயங்கி கிடக்கிறாள் புவிமகள்.
மழைவிட்ட போதினிலும்
ஆசைத்திவலைகள் தெரிதுக்கிடகின்றன,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் புவிமகள் மீதினிலே.
.
.
.
இப்போது இருவர் மனதும் ஏங்குகிறது 
அடுத்ததோர் அடைமழைக்கு.
நேற்றொரு அழகிய 
மாலை பொழுதில் பார்த்தேன் 
அழகான வெண்பஞ்சு மேகங்களுடன் 
கார்மேகம் கலவி கொள்வதை
.
.
.
இறுதியில் பொழிந்தது மழை
நனைந்தது தான் 
தற்போதிய நிலை...
உன்னிடம் பேச எத்தனித்துவிட்டு 
எதுவும் பேசாமல் போகும் 
என் கண்கள் பேசும் பாசை 
இன்னுமா புரியவில்லைஉனக்கு...
நேற்று நானும் 
அவளும் செல்கையில் 
சரியான மழை 
இருவரும் நனைந்தோம் ...
அவள் மழையிலும் 
நான் அவளிளும்....
என் மடிக்கணினி 
ஆக மாட்டாயா பெண்ணே!
உன் மனவலைதளத்தில் 
என்னை நான் தேட...
ஒரே மழை தான் ஆனால்
ஒரே நேரத்தில்
இம்சிக்கவும் செய்கிறது
மனதுக்குள் இசைக்கவும் செய்கிறது
வஞ்சனை செய்கிறது
வர்ணிக்கவும் வைக்கிறது
என்னை இப்படி கிறுக்கவும் கூட 
ஒற்றை ரோஜா வாடுகிறது
உன் கற்றைக்குழல் சூடக் கிடைக்காமல்...
பௌர்ணமி நிலவும் பிறையாய் தேய்கிறது
உன் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் தாளாமல்...
அதெப்படி
என் இதயம் 'லப்' என திறக்கும் போது
உன் இதயம் மட்டும் 'டப்' என கதவடைதுக்கொள்கிறது...
கவிஞனே 

இப்போதே நிறுத்திக்கொள் 
பெண்களை சிலை என்று வர்ணிப்பதை.

ஏனென்றால் 
எந்த சிலையும் 
பூக்களால் செதுக்கபடுவதில்லை ...
அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்...
எப்படி இப்படி நீங்கள் ...
பள்ளி பருவத்தில் பாசம் கட்டினீர்கள்
கல்லூரி காதலனை காணாமல் போக செய்தீர்கள்
தாலி கொண்ட பின் கொண்டவனை தாளிகிண்றீர்கள் 
இருந்தபோதிலும் தாய்மை பேணுகின்றீர்கள் ...
மறுபடியும் ஒருமுறை ...
அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்...
.
.
.
.
.
.
.
.
பின் குறிப்பு : அழகு என்பது அகத்தின் அழகே ...
முன்பெல்லாம் முழுவதுமாய் 
என்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் படுக்கையில்
இப்போது இடப்பக்கமாய் 
ஓர் இடம் விட்டு 
படுக்கின்றேன் உன்னக்காக .....

தவறாக நினைக்க வேண்டாம் 
கனவில் வரும் நீ 

கண்ணயர்ந்தால் பள்ளி கொள்ளவே ...
இயற்கையின் காதலன்...
அன்பே அந்த மர சாலையில் செல்லாதே
காற்று பலமாய் வீசுகிறது
பூக்கள் உதிர்ந்து உனக்கு காயம் பட்டு விடபோகிறது 
பூக்களை காலால் கூட மிதிக்காதே
பாதம் புண்ணாகி விடபோகிறது
நீ தொட்டு உடுத்திய பட்டு பரவசபடுகிறது
இட்டுக்கொண்ட பொட்டு இன்பத்தில் மிதக்கிறது
சூடிக்கொண்ட பூவோ சூழ்நிலை மறுக்கிறது.
இது தற்செயலா இல்லை உன்செயலா என்று புரியவில்லை எனக்கு...
நீ கோபம் கொண்ட போதெல்லாம்
நானிருக்கும் பகுதியில் இயற்க்கை சீற்றம்.
என் இயற்கையாய் ஆனவளே
நான் விரும்பும் இயற்கையை போல
உன்னையும் காதலிக்கிறேன்
Tricks and Tips